sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.34 லட்சம் மோசடி; இருவர் கைது

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.34 லட்சம் மோசடி; இருவர் கைது

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.34 லட்சம் மோசடி; இருவர் கைது

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.34 லட்சம் மோசடி; இருவர் கைது


ADDED : ஆக 02, 2024 06:21 AM

Google News

ADDED : ஆக 02, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த நபர்களை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோவை, சுங்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்; தனியார் நிறுவன ஊழியர். இவரிடம் துடியலுார் அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனசேகரன்,29, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவை சேர்ந்த ரவி சந்துரு,58, ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆன்லைன் வாயிலாக அருண்குமாரை தொடர்புகொண்டனர்.

மேலும், இதுதொடர்பான வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர். இதை நம்பி அருண்குமார் ரூ.34 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கான லாபத்தொகை வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வங்கிக்கணக்கு புத்தகங்கள், ஏ.டி.ஏம்., அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us