sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்

/

சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்

சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்

சித்திரைச்சாவடி முதல் வேடப்பட்டி வரை! தங்கு தடையின்றி வந்தடைந்த மழை நீர்


ADDED : மே 18, 2024 11:52 PM

Google News

ADDED : மே 18, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து வழங்கு வாய்க்காலில் திறந்து விடப்பட்ட மழை நீர், வேடப்பட்டி மயானம் வரை வந்தடைந்தது.

கோவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. சிறுவாணி அடிவாரம் மற்றும் கோவை குற்றாலத்தில் இருந்து மழை நீர் ஆற்றில் வந்தது.

கிருஷ்ணாம்பதி குளத்துக்கு நீர் வருவதற்காக, சித்திரைச்சாவடி அணைக்கட்டில் உள்ள மூன்று மதகுகளும் திறந்து விடப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால், வாய்க்கால் துார்வாரப்பட்டு இருந்ததால், வேடப்பட்டி மயானம் வரை மழை நீர் தங்குதடையின்றி வந்தடைந்தது.

நம்பியழகன்பாளையத்தில் நாகராஜபுரம் என்ற இடத்தில் வாய்க்கால் குறுக்கே செல்லும் பாலத்தை அகலப்படுத்த தோண்டப்பட்டு இருக்கிறது. அதற்காக வாய்க்கால் குறுக்கே மண்ணை கொட்டி, தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குளத்துக்கு நீர் வர முடியாத சூழல் இருக்கிறது.

மேலும், நாகராஜபுரத்தில் இருந்து கிருஷ்ணாம்பதி குளம் வரை நீர் வழங்கு வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

இதேபோல், உக்கடம் பெரிய குளம் மற்றும் குறிச்சி குளத்துக்கு மழை நீர் செல்லக்கூடிய வாய்க்கால் துார்வாரும் பணியில், மாநகராட்சி பொறியியல் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை நீரை குளங்களில் சேகரிக்க, நீர் வழங்கு வாய்க்கால்கள் துார்வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. சேத்துமா வாய்க்காலில் ஒரு குழாய் உடைந்து,மீண்டும் நொய்யல் ஆற்றுக்கே தண்ணீர் திரும்பிச் செல்வதாக கூறினர். அப்பகுதியில் மட்டும் ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்பு குழாய் பதிக்க அறிவுறுத்தியிருக்கிறேன். உக்கடம் குளத்துக்கு நீர் வரும் சேத்துமா வாய்க்கால், குறிச்சி குளத்துக்கு நீர் வரும் ராஜவாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

- சிவகுரு பிரபாகரன்,மாநகராட்சி கமிஷனர், கோவை

சிறுவாணியில் மழை

கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி மற்றும் பில்லுார் அணை பகுதிகளில் கன மழை பதிவாகியிருக்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 24 மி.மீ., அடிவாரத்தில், 24 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. 9.71 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. குடிநீர் தேவைக்கு, 3.57 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. பில்லுார் அணை பகுதியில், 170 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல், ஆழியாறு அணையில, 51 மி.மீ., மழை பெய்துள்ளது.மற்ற இடங்களில் மழையளவு:தொண்டாமுத்துார் - 50 மி.மீ., பீளமேடு விமான நிலையம் -41.3, சின்கோனா - 34, சூலுார் - 33, கிணத்துக்கடவு - 31, மேட்டுப்பாளையம் - 30.5, வேளாண் பல்கலை - 27.5, சின்னக்கல்லார் - 25, வால்பாறை - 23, பெரியநாயக்கன்பாளையம் - 21.4, போத்தனுார் - 10, மதுக்கரை - 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.








      Dinamalar
      Follow us