sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி; பூஜை செய்து வணங்கிய வளர்ப்பு யானைகள்

/

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி; பூஜை செய்து வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி; பூஜை செய்து வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி; பூஜை செய்து வணங்கிய வளர்ப்பு யானைகள்

1


ADDED : செப் 08, 2024 05:31 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி அடித்தபடி கோயிலை சுற்றி வந்து விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று, மாலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமையில் நடந்தது.

விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில், பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, வளர்ப்பு யானை கிருஷ்ணா, கோவில் மணி அடித்தபடி கோயிலை சுற்றி வந்து பூஜை செய்து விநாயகரை வணங்கியது. கோவில் முன்பு வரிசையாக நின்ற யானைகள், தும்பிக்கைகளை உயர்த்தி விநாயகரை வணங்கியது. இந்நிகழ்வு, அங்கு வந்த சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது.

விழாவில், வனச்சரகர்கள் மேகலா, விஜய், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், வன ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us