sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தலுக்கான ஏற்பாடு சரியா இருக்கா பொது பார்வையாளர்கள் ஆலோசனை

/

தேர்தலுக்கான ஏற்பாடு சரியா இருக்கா பொது பார்வையாளர்கள் ஆலோசனை

தேர்தலுக்கான ஏற்பாடு சரியா இருக்கா பொது பார்வையாளர்கள் ஆலோசனை

தேர்தலுக்கான ஏற்பாடு சரியா இருக்கா பொது பார்வையாளர்கள் ஆலோசனை


ADDED : மார் 28, 2024 03:52 AM

Google News

ADDED : மார் 28, 2024 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பொது பார்வையாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

லோக்சபா தேர்தலை கண்காணிக்க, கோவை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் வினோத் ராவ் (கோவை), அனுராக் சவுத்ரி (பொள்ளாச்சி), காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர், நேற்று கோவை வந்தனர்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை செய்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்தி குமார் தலைமை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான, டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தார்.

வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரி வர கடைபிடிக்கப்படுகிறதா, விதிகள் மீறப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல், கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடு, சி-விஜில் செயலி புகார் பதிவு, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, தபால் ஓட்டுப்பதிவை செயல்படுத்துதல், ஓட்டுப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ள பணிகள், தேர்தல் விதிமீறல் தொடர்பான பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விபரம், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், அதிகமான கூட்டம் கூடுவதை தவிர்க்க மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெகடர் ஸ்வேதா மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us