/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் போராட்டம்
/
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : செப் 12, 2024 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப்போராட்டம் நேற்று நடந்தது.
கழக கிளை தலைவர் பாலமுருகன், செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் நடந்த போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
புத்தாக்க பயிற்சிக்கான கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.