/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு போட்டித் தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு போட்டித் தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2024 01:25 AM

கோவை;அரசுப் போட்டித் தேர்வுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சின்னவேடம்பட்டி,எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியுடன் இணைந்து, சிவில் சர்வீஸ் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. எஸ்.என்.எஸ்.,பொறியியல் கல்லுாரியின் முதல்வர் சார்லஸ் துவக்கி வைத்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வு 2023ல் தனது முதல் முயற்சியிலேயே175வது ரேங்க் பெற்ற நேஹா, மாணவர்களை ஊக்கமூட்டும் வகையில், தன்அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைமை வணிக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆதித்யா, கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் ஆகியோர் அரசுத் துறைவேலை வாய்ப்புகள் குறித்துவழிகாட்டுதல்களை வழங்கினர்.
இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.