ADDED : ஆக 08, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:மசக்கவுண்டன் செட்டிபாளையம் மற்றும் கொண்டையம்பாளையம் ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் குறித்து, சமூக தணிக்கை நடத்தி, 9ம் தேதி (இன்று) காலை 11:00 மணிக்கு, சிறப்பு கிராம சபை நடத்த வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் கொண்டையம் பாளையம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, என பத்து ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது.