sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டம்

/

வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டம்

வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டம்

வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டம்


ADDED : மே 19, 2024 10:45 PM

Google News

ADDED : மே 19, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;இடிகரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தை மேற்கொண்டனர்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவர்கள், இளங்கலை படிப்பின் ஒரு பகுதியாக 'ஸ்டூடன்ட் ரெடி' திட்டத்தில் ஊரக வேளாண் விரிவாக்க கிராமத்தில் தங்கும் திட்டத்தின்படி, 'கிராம தங்குதல்' மேற்கொண்டு விவசாயம் படித்து வருகின்றனர்.

இவர்களில், 10 பேர் கொண்ட குழு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரையில் தங்கினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவர்கள் இடிகரை உயர்நிலைப் பள்ளிக்கு வந்து, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்த ஆண்டின் கருப்பொருளான பூமி மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான விவாதங்களை மாணவர்களுடன் மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் மாசுபாடு, அது இயற்கைக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பூமியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்துக்காக பிளாஸ்டிக் முடிவுக்கு கொண்டு வருவது என்ற கருப்பொருளின் கீழ் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் குறித்து விளக்கினர்.

மேலும், மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவம் குறித்து கருத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us