ADDED : ஏப் 30, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம், மே 1-
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.
கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், 3:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. மழை திடீரென ஆலங்கட்டி மழையாக பெய்ய துவங்கியதால், ரோடு முழுவதும் சிறு, சிறு பனிக்கட்டிகளாக, ஆலங்கட்டி பரவி கிடந்தது. சுமார், 45 நிமிடங்கள் பெய்த மழையால், மாலை நேரங்களில் நிலவும் கடும் வெப்பம், ஓரளவு குளிர்ந்து, இதமான சூழ்நிலை நிலவியது. இம்மழையால் சாலை ஓரத்தில் மழை நீர் பெருக்கெடுத்தது.
