/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு
/
அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு
அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு
அரசு மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டு
ADDED : மே 10, 2024 01:44 AM

மேட்டுப்பாளையம்;வெப்ப அலையால் ஏற்படும், 'ஹீட் ஸ்ட்ரோக்' பிரச்னைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:
வெப்பத்தால், திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 4 பெட்களுடன் சிறப்பு வார்டு துவங்கியுள்ளோம். இந்த சிறப்பு வார்டில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.
மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு, உப்பு -சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்.,குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.