sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறையில் மீண்டும் தீவிரமடைந்த மழை

/

வால்பாறையில் மீண்டும் தீவிரமடைந்த மழை

வால்பாறையில் மீண்டும் தீவிரமடைந்த மழை

வால்பாறையில் மீண்டும் தீவிரமடைந்த மழை


ADDED : ஆக 13, 2024 01:37 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை சீசன் துவங்கியது. ஜூலை மாத இறுதியில் மழை தீவிரமடைந்ததால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த மாதம், 19ம் தேதியும், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணை, 28ம் தேதியும் நிரம்பின.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இடியுடன் கனமழை பெய்தது. கனமழையினால் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 158.74 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 1,374 கனஅடி தண்ணீர் வரத்காக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,438 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால், பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில், நேற்று காலை, 70.41 அடி நீர்மட்டம் இருந்தது. அதிகபட்சமாக சின்கோனாவில், 42 மி.மீ. மழையளவு பதிவானது.

வால்பாறை அடுத்துள்ள, ரொட்டிக்கடை பகுதியில் காளிதாஸ் என்பவரின் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில், சமையல் அறை சேதமானது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி நேரில் பார்வையிட்டு, மழை நீர் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us