sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரம்பரை அறங்காவலர்கள் நலசங்கம் உதயம்

/

பரம்பரை அறங்காவலர்கள் நலசங்கம் உதயம்

பரம்பரை அறங்காவலர்கள் நலசங்கம் உதயம்

பரம்பரை அறங்காவலர்கள் நலசங்கம் உதயம்


ADDED : மே 24, 2024 01:30 AM

Google News

ADDED : மே 24, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில் களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்கம் உதயமானது. இதன் ஆரம்ப கட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது: -பரம்பரை அறங்காவலர் குழு; அரசு மற்றும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் தான் இப்புதிய சங்கம் துவங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க உள்ள கோவில்களுக்கு அரசு மிகப்பெரிய அளவில் திருப்பணிகள் செய்து வருகிறது. அதற்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம்.

அதே சமயம் எங்களது குறைகளையும் அரசுக்கு தெரிவிப்பதற்கு வாய்ப்பாக இச்சங்கம் அமையும் என்று நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல முன்னாள் இணை ஆணையாளர் செந்தில் வேலவன், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன் உடப்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us