/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
ADDED : ஏப் 07, 2024 09:08 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 37 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 14,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே, எந்த காரணத்தைக் கொண்டும் இளநீர் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். தரமான இளநீருக்கு நல்ல விலை கேட்டுப்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

