/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
ADDED : ஏப் 28, 2024 11:46 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 39 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 15,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநீர் வரத்து மிக, மிக குறைந்து காணப்படுவதால், இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அவர்கள், விலையை அதிகரித்து வாங்குகின்றனர். வரலாறு காணாத அளவு இளநீர் தட்டுப்பாடு உள்ளதால், எந்த காரணத்தை கொண்டும் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
கடுமையான இளநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, வரக்கூடிய வாரத்திலும் இளநீரின் விலை உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

