/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
ADDED : மே 12, 2024 10:50 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 16,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநீர் வரத்து தொடர்ந்து மிக குறைவாக உள்ளது. இளநீரின் தேவை பலமடங்கு உயர்ந்துள்ளது. எனவே, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.