ADDED : மே 11, 2026 09:01 PM
சேதமடைந்த மின்கம்பத்தால் ஆபத்து கோவை மாநகராட்சி, கோவைபுதுார், 91 வது வார்டு, காமாட்சி நகர், விசாலாட்சி அம்மன் கோவில் அருகில் மின்கம்பத்தின் ( எண்: 4) அடிப்பகுதி உடைந்து கம்பி துருபிடித்து வெளியில் தெரிகிறது. மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருப்பதால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். மின் கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–விட்டல் முருகன்: உயரம் பத்தல காட்டூர் காளீஸ்வரா மில் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை மேனுவல் ரோட்டை விட உயரம் குறைவாக இருப்பதால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதைத்தவிர்க்க மேனுவலை உயர்த்தி அமைக்க வேண்டும்.
–சதாசிவம்: துர்நாற்றம் தாங்கல கோவை வ.உ.சி. மைதானத்துக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். மைதானத்தை சுற்றி ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் மூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–பரமசிவம்: சுகாதார சீர்கேடு
கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்டுக்கு முன்புறம் உள்ள மாநகராட்சி கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.
–விநாயகம், காந்திபுரம்
