/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு அதிகரிப்பு
/
அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு அதிகரிப்பு
ADDED : ஜூலை 06, 2024 02:03 AM
வால்பாறை;வால்பாறை அரசு மருத்துவமனையில், கடந்த 6 மாதங்களில், 70 குழந்தைகள் பிறந்துள்ளன, என, மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் தெரிவித்தார்.
வால்பாறை அரசு மருத்துவமனையில், எஸ்டேட் பகுதி மக்கள் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பிறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ வசதிகள் உள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகேஸ்ஆனந்தி கூறுகையில், ''வால்பாறை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பான முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும், மருத்துவமனையில் உள்ளதால், எந்தவித சிரமும் இல்லாமல் சுகப்பிரசவம் நடக்கிறது.
கடந்த ஆண்டு, 105 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த ஆண்டு இது வரை, 70 குழந்தைகள் பிறந்துள்ளன. 51 பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.