/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி வரத்து அதிகம் விலையில் மாற்றம்
/
காய்கறி வரத்து அதிகம் விலையில் மாற்றம்
ADDED : ஜூன் 17, 2024 11:19 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை, தினசரி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு, காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், காய்கறிகள் வரத்து அதிகரித்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (28 கிலோ) - 1,500, தேங்காய் ஒன்று - 15, கத்தரிக்காய் (கிலோ) - - 50, முருங்கைகாய் -- 60, வெண்டைக்காய் - 50, முள்ளங்கி - 40, பூசணிக்காய் - 35, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 60, புடலை - 20, சுரைக்காய் - 25, பீக்கங்காய் - 80, பீட்ரூட் - 30, அவரைக்காய் -- 100, பச்சை மிளகாய் - 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரத்தை விட, தற்போது காய்கறிகளின் விலை மாறுபட்டுள்ளது. இதில், சுரைக்காய் - 5 ரூபாய், முருங்கை, வெண்டை, பூசணி, பாகற்காய், பீர்க்கன் போன்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளது. கத்தரிக்காய் - 15 மற்றும் பச்சைமிளகாய் கிலோ - 40 ரூபாய் விலை சரிந்துள்ளது.
ஒரு சில காய்கறிகள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மற்ற காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்கலாம்.
இவ்வாறு, கூறினர்.

