sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஆட்டோமேஷன்' துறையில் முன்னணி 'ஆப் வியூ எக்ஸ்' நிறுவனர் தகவல்

/

'ஆட்டோமேஷன்' துறையில் முன்னணி 'ஆப் வியூ எக்ஸ்' நிறுவனர் தகவல்

'ஆட்டோமேஷன்' துறையில் முன்னணி 'ஆப் வியூ எக்ஸ்' நிறுவனர் தகவல்

'ஆட்டோமேஷன்' துறையில் முன்னணி 'ஆப் வியூ எக்ஸ்' நிறுவனர் தகவல்


ADDED : பிப் 27, 2025 11:31 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ''ஆட்டோமேஷன்' துறையில் முன்னணி இடம் பிடித்துள்ள நிலையில் கோவையில் அதிக முதலீடு செய்ய உள்ளோம்,'' என, 'ஆப் வியூ எக்ஸ்' நிறுவனர் ஆனந்த் புருஷோத்தமன் கூறினார்.

கோவையை சேர்ந்த 'ஆப் வியூ எக்ஸ்' நிறுவனர் ஆனந்த் புருஷோத்தமன், தனியார் ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில்,''சைபர் பாதுகாப்பு என்பது உலகளவில் சவாலாக இருந்து வருகிறது. இச்சூழலில் தொழில் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் தரவுகளை பாதுகாக்கும் வலுவான தொழில்நுட்பங்களுடன், இங்கு திறமையான பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போது, அமெரிக்கா, லண்டன் அடுத்து கோவை, பெங்களூருவில் சிறப்பு மையங்கள் அமைத்துள்ளோம்.

விரிவாக்கத்தை அடுத்து இந்தியாவில் குறிப்பாக கோவையில் முதலீடுகளை அதிகரிக்க உள்ளோம். இதனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்,'' என்றார்.

'ஆப் வியூ எக்ஸ்' நிறுவன தலைமை செயல் அதிகாரி டினோ டிமாரிடேனா கூறுகையில்,''ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகளவில் அத்தியாவசியமாக மாறிவருகிறது. இச்சூழலில் எங்கள் நிறுவனம் மனிதர் அல்லாத அடையாள மேலாண்மையில் முன்னணி வகிக்கும்,'' என்றார்.

தலைமை வாடிக்கையாளர் அதிகாரி பிரபாகர் மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us