/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் முகாம்களை தொடர அறிவுறுத்தல்
/
காய்ச்சல் முகாம்களை தொடர அறிவுறுத்தல்
ADDED : ஏப் 23, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாவட்டத்தில், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த பிப்., வரை காய்ச்சல் பாதிப்பு இருந்தது. சுகாதார துறை சார்பில், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், முகாம்களை தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதைத்தடுக்கவே, காய்ச்சல் முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

