sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

/

தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 23, 2024 09:00 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆக., 21க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு தற்காலி பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

இதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆக., 21ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்ப படிவம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தியேட்டர் போன்ற இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us