sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொரோனா தொற்றால் இறந்தவரின் கடனை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவு

/

கொரோனா தொற்றால் இறந்தவரின் கடனை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவு

கொரோனா தொற்றால் இறந்தவரின் கடனை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவு

கொரோனா தொற்றால் இறந்தவரின் கடனை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவு


ADDED : ஜூலை 04, 2024 05:05 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கொரோனா தொற்றால் இறந்தவர் வாங்கிய கடனை, இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வெங்கடேஷா காலனியை சேர்ந்தவர் முகமது ரபி என்பவர், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில், கடந்த 2021, ஜனவரியில், 9.55 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கினார்.

இதற்காக, கோடாக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில், வீட்டுக்கடன் பெற்றதற்காக ஒரே தவணையாக, 48,213 ரூபாய் செலுத்தி அவரது பெயருக்கு, 2035 வரை இன்சூரன்ஸ் செய்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முகமது ரபி, கோவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2021, மே 12ல் இறந்தார்.

கொரோனா தொற்றால் அவர் இறந்ததாக, அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர். இதனால், முகமது ரபி வாங்கிய வீட்டுக்கடனுக்கு, காப்பீடு தொகை வழங்க கோரி, கோடாக் மகேந்திரா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, அவரது மனைவி ஹசீனா விண்ணப்பித்தார். ஆனால், முகமது ரபிக்கு, 10 ஆண்டுகளாக இருந்த முன்நோய் காரணமாக இறந்ததாக கூறி, விண்ணப்பத்தை நிராகரித்தனர். இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஹசீனா வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 'கொரோனா தொற்று பாதிப்பால், இறந்தவர் வாங்கிய கடனுக்கான தொகை, ரூ.10.12 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us