sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்ணா?

/

கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்ணா?

கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்ணா?

கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்ணா?


ADDED : பிப் 27, 2025 09:24 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாகவே ஒரு வினாத்தாளில், வார்த்தைக்கு வார்த்தையும், வரிக்கு வரியும், பதிலுக்கு பதிலும் எந்தளவிற்கு இடம் விட வேண்டும் என்பது மட்டுமின்றி, உப தலைப்பிற்கும், பதிலுக்கும் இடையே எந்தளவிற்கு இடம் இருந்தால், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

அடித்தல், திருத்தல்களை முடிந்தளவு தவிர்க்கவும். எதையும் எழுதும் முன்னதாக, சற்றே யோசித்து, நாம் சரியான பதிலைத் தான் எழுதுகிறோமா என்பதை உறுதி செய்தே எழுதவும். எதிர்பாராத சிறிய அடித்தல் திருத்தலுக்கு, ஒயிட்னர் பயன்படுத்தலாம். பெரிய தவறாக இருந்தால், அவற்றின்மேல், ஒரே ஒரு x மார்க் போட்டு விடலாம். அனைவரும் கேள்விப்பட்ட ஒரு பொது கருத்து, அனைத்திலும் உண்டு.

நம் கையெழுத்து சற்று மோசமானதாக இருந்தாலும், அதனை விடைத்தாளில், சரியான முறையில் எழுதும்போது, அது ஓரளவுக்கு அழகானதாகவே மாறிவிடுகிறது. அழகான கையெழுத்து என்பது ஒரு கூடுதல் நன்மை, அவ்வளவே. அதற்காக, மோசமான கையெழுத்து உள்ளவர்களெல்லாம், சரியாக எழுதியிருந்தாலும், அவர்களுக்கு நியாயமான மதிப்பெண் கிடைக்காது என்று கருத வேண்டியதில்லை.

சரியில்லாத கையெழுத்தை, அழகான முறையில் எழுதாமல், அதாவது, அடித்தல் திருத்தலுடன் எழுதுவதில் என்ன சிக்கலென்றால், திருத்தும் ஆசிரியருக்கு படித்துப் பார்ப்பதிலேயே பிரச்னை இருந்துவிடக்கூடாது என்பதுதான்.






      Dinamalar
      Follow us