sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தகுதி அடிப்படையில் பட்டா வழங்குங்க! கலெக்டர் அறிவுறுத்தல்

/

தகுதி அடிப்படையில் பட்டா வழங்குங்க! கலெக்டர் அறிவுறுத்தல்

தகுதி அடிப்படையில் பட்டா வழங்குங்க! கலெக்டர் அறிவுறுத்தல்

தகுதி அடிப்படையில் பட்டா வழங்குங்க! கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : பிப் 21, 2025 10:56 PM

Google News

ADDED : பிப் 21, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

''தகுதியுள்ள மக்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்கும் வகையில், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்,'' என, திருப்பூர் கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பேசியதாவது:

அதிகளவில், வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட இடங்களின் பட்டியல், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பிற துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இனங்களில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ஆன் லைன்' சான்றிதழ், பட்டா மாறுதல் ஆகியவை உரிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட வேண்டும்.

வருவாய்த்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய வட்டங்களை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, தகுதி அடிப்படையில் பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், நத்தம், இட்டேரி, பூமி தானம், பிற்படுத்தப்பட்டோர் நத்தம், ஆதி திராவிடர் நத்தம், வண்டிப்பாதை, சாலை, தரிசு, தீர்வை ஏற்படாத தரிசு, தீர்வை ஏற்பட்ட தரிசு, பனந்தோப்பு, மந்தை ஆகிய நிலங்களின் விபரங்கள் குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ள விபரங்களை சேகரிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை முடித்து, தகுதியுள்ள மக்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்கும் வகையில், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ., தாசில்தார், உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us