sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜே.சி.பி., மோதி கிளீனர் பலி

/

ஜே.சி.பி., மோதி கிளீனர் பலி

ஜே.சி.பி., மோதி கிளீனர் பலி

ஜே.சி.பி., மோதி கிளீனர் பலி


ADDED : மே 09, 2024 11:21 PM

Google News

ADDED : மே 09, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;அன்னுார் அருகே ஜே.சி.பி., வாகனத்தை உரிமையாளர் இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார்.

அக்கரை செங்கப்பள்ளியில் வரதராஜ் என்பவரது தோட்டத்தில் கல், மண் ஆகியவற்றை சமன்படுத்துவதற்காக நேற்று அதிகாலை ஜே.சி.பி., வாகனம் இயக்கப்பட்டது.

அப்போது வாகன உரிமையாளரான அக்கரை செங்கப்பள்ளி, கவுரிசங்கர், 31. ஜே.சி.பி., வாகனத்தை இயக்கினார்.

வாகனம் பின்புறம் வந்த போது அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜே.சி.பி., வாகனத்தின் கிளீனர் காட்டம்பட்டி, முதலிபாளையத்தை சேர்ந்த வீராசாமி மகன் உதயகுமார், 17. மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

குரும்பபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அன்னுார் போலீசார் ஜே.சி.பி., வாகனத்தை இயக்கிய கவுரி சங்கர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us