sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து 'ஜம்ப்' ரத்தினபுரி 'ராவடி'க்கு ராத்திரியில் 'கட்டு'

/

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து 'ஜம்ப்' ரத்தினபுரி 'ராவடி'க்கு ராத்திரியில் 'கட்டு'

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து 'ஜம்ப்' ரத்தினபுரி 'ராவடி'க்கு ராத்திரியில் 'கட்டு'

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து 'ஜம்ப்' ரத்தினபுரி 'ராவடி'க்கு ராத்திரியில் 'கட்டு'


ADDED : ஜூலை 29, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பல்வேறு வழக்குகளில் தேடப்படும் ரத்தினபுரியை சேர்ந்த சுஜிமோகன், போலீசாரை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கோவை, கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்,41; ஆட்டோ டிரைவர். இவர் நீலிக்கோணாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் நடந்துசென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த ரத்தினபுரி, கண்ணப்ப நகரை சேர்ந்த சுஜிமோகன்,30, கணேசனை பின்தொடர்ந்து சென்று, பணம் கேட்டுள்ளார்.தரமறுத்த கணேசனிடம், தான் ரத்தினபுரி ரவுடி என்றும், நிறைய வழக்குகள் தன்மீது இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளார். பின்னர், தான் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் வயிற்றில் வைத்து மிரட்டி, மொபைல் போன், ரூ.450 ரொக்கத்தை பறித்து தப்பினார்.

கணேசன் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான சுஜிமோகனை தேடிவந்தனர். சுஜிமோகன் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட, 11 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு போலீசார் வாகனத்தை பார்த்ததும் கணபதி, டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சுஜிமோகன் கீழே குதித்துள்ளார்.

இதில், அவரது இரு கால்களிலும் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us