sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்; காரமடை நகராட்சி 'அதிரடி'

/

தேர் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்; காரமடை நகராட்சி 'அதிரடி'

தேர் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்; காரமடை நகராட்சி 'அதிரடி'

தேர் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்; காரமடை நகராட்சி 'அதிரடி'


ADDED : மார் 05, 2025 10:40 PM

Google News

ADDED : மார் 05, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடையில், தேர் செல்லும் வீதிகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 12ல் நடக்க உள்ளது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், காரமடை அரங்கநாதர் கோவிலில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, 'தேர் செல்லும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்ற வேண்டும். சாலைகளில் உள்ள குழிகளுக்கு தார் போட வேண்டும்.

பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை, காண்காணிப்பு கேமிராக்களை அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சியின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காரமடை நகராட்சி கமிஷனர் மதுமதி உத்தரவின்படி, நேற்று மதியம் காரமடையில் தேர் செல்லும் வீதிகளில் ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நடந்தது. கோவில் முன்பாக இருந்த கடைகள், நான்கு ரத வீதிகளில் உள்ள தற்காலிக கடைகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.






      Dinamalar
      Follow us