/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கார்த்திகை வழிபாடு
/
கோவில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : ஜூலை 03, 2024 02:44 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூளேஸ்வரன்பட்டி விஜயகணபதி கோவிலில், விஜயகணபதி, அங்காளம்மன், சுப்ரமணியர், ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் சுப்ரமணியர் அருள்பாலித்தார்.
இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் கார்த்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை: உடுமலை காந்திநகரில் வரசித்தி விநாயகர் கோவிலில், ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுற்றுப்பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.