sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரிசி மில் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: மூவர் கைது

/

அரிசி மில் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: மூவர் கைது

அரிசி மில் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: மூவர் கைது

அரிசி மில் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: மூவர் கைது


ADDED : ஜூலை 29, 2024 08:26 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்:அரிசி மில் உரிமையாளரை கடத்தி, 23 ஆயிரம் ரொக்கத்தை பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

உக்கடம் அருகேயுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 35: அரிசி மில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டிற்கு வந்த ஜியா, சிக்கந்தர்பாஷா ஆகியோர் இவரை வெளியே வருமாறு மொபைல் போன் மூலம் அழைத்தனர். வெளியே வந்தவரிடம் அவரது மொபைல்போனை சிக்கந்தர்பாஷா பிடுங்கினார். மேலும் அரிசி கடத்தல் குறித்து யாருக்கேனும் தகவல் கூறினாரா என கேட்டுள்ளார். ஜாபர் சாதிக் அதனை மறுத்துள்ளார்..

அப்போது காரில் வந்த தவுபிக், 39, முஹமது அசாருதீன்,35, உள்ளிட்ட ஐந்து பேர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். மேலும் காரில் ஏற்றி, குனியமுத்தூர், பாலக்காடு மெயின் ரோடு அருகேயுள்ள கார் பெயின்டிங் ஒர்க் ஷாப்பிற்கு கடத்திச் சென்றனர். நைலான் கயிற்றால் கட்டி, தாக்கினர். மேலும் அவரிடமிருந்த, 23 ஆயிரம் ரூபாயை பறித்து, அங்கிருந்து துரத்திவிட்டனர்.

ஜாபர் சாதிக் புகாரில் குனியமுத்தூர் போலீசார் சிக்கந்தர்பாஷா, தவுபிக் மற்றும் முஹமது அசாருதீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us