ADDED : ஜூலை 31, 2024 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
அதில், மொத்தம், 250 கொப்பரை மூட்டைகளை, 49 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். குறைந்தபட்சம், 89.11 ரூபாய்க்கும், அதிக பட்சமாக, 93.89 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த வாரம், 9.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 112.50 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

