/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்து அன்னையர் முன்னணியினர் தீர்த்த குட ஊர்வலம்
/
இந்து அன்னையர் முன்னணியினர் தீர்த்த குட ஊர்வலம்
ADDED : ஆக 17, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி மாதம் ஐந்தாம் வெள்ளியான நேற்று, அம்மன் தீர்த்த குட நீர் மஞ்சளபிஷேக விழா நடந்தது.
செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, எல்லை கருப்பராயன் கோவில் வரை மஞ்சளபிஷேக ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தில் பக்தர்கள் தீர்த்த குடத்தை தலையில் வைத்துக்கொண்டு, அம்மனின் சரணங்களை பாடி மகிழ்ந்தனர்.
நிகழ்வில், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, செயற்குழு உறுப்பிர் சஸ்மிதா அம்பிகாவதி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ், மாவட்டத்தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

