/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
ADDED : மே 04, 2024 12:29 AM

கோவை;கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன், தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பாராட்டினர்.
தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 9 எஸ்.ஐ., கள், 2 சிறப்பு எஸ்.ஐ.,கள், 13 தலைமை காவலர்கள், 6 முதல் நிலைக் காவலர்கள், 13 போலீசார் என மொத்தம், 46 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி., வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.