/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரக்கடவுள் கோவிலில் 9ல் கும்பாபிஷேக விழா
/
குமரக்கடவுள் கோவிலில் 9ல் கும்பாபிஷேக விழா
ADDED : மார் 02, 2025 10:50 PM
கோவில்பாளையம், ;பழமையான கரட்டுமேடு குமரக்கடவுள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 9ம் தேதி நடக்கிறது.
குரும்பபாளையம் அருகே கரட்டுமேடு கோவில் என்று அழைக்கப்படும், ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள், உபயதாரர்கள் உதவியோடு செய்து முடிக்கப்பட்டுள்ளன.
வரும் 6ம் தேதி அதிகாலை திருவிளக்கு வழிபாடுடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. அடிவாரத்தில் உள்ள வன்னீஸ்வரர் சன்னதியில் இருந்து தீர்த்த குடம் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு, முதல் கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை, இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை விமான கலசங்கள் நிறுவுதல், நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. மாலையில் ஐந்தாம் கால வேள்வி பூஜை நடக்கிறது.
வரும் 9ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு பாத விநாயகர், இடும்பன், கடம்பன், கன்னிமார், வன்னீஸ்வரர், நாகசக்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7:45 மணிக்கு மூலமூர்த்தி விமானத்துக்கும், 8:15 மணிக்கு குமரக்கடவுளுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், பொம்மபுர ஆதினம் சிவ ஞானபாலய சாமிகள் உள்ளிட்ட மடாதிபதிகள் பங்கேற்கின்றனர்.