ADDED : மே 30, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்போரை பிடிக்க, மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவ்வை நகர் பகுதியில் சர்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரிடம் விசாரித்தனர்.
அவர், அதே பகுதியை சேர்ந்த பிச்சைபாண்டி, 23; கூலி தொழிலாளி விற்பனைக்காக, 1.2 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது.
கஞ்சாவுடன், பிச்சைபாண்டியை போலீசார் கைது செய்தனர், ரவுடியான இவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.