sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூடிக்கிடக்கும் கற்றல் மையங்கள்: மக்கள் அதிருப்தி

/

மூடிக்கிடக்கும் கற்றல் மையங்கள்: மக்கள் அதிருப்தி

மூடிக்கிடக்கும் கற்றல் மையங்கள்: மக்கள் அதிருப்தி

மூடிக்கிடக்கும் கற்றல் மையங்கள்: மக்கள் அதிருப்தி


ADDED : மார் 28, 2024 05:11 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : குடிமங்கலம் ஒன்றியத்தில், மூடிக்கிடக்கும், கற்றல் மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியத்தில், மகளிர் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, கிராம பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை உள்ளடக்கி, 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் 2007ல், அறிமுகப்படுத்தப்பட்டது.

கிராமப்பெண்களை உள்ளடக்கிய, வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக, பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில், கிராமங்களில், போட்டித்தேர்வுக்கு தயாராகும், பட்டதாரிகள் மற்றும் பிறர் பயன்பெறும் வகையில், கிராம கற்றல் மையம் துவக்கப்பட்டது.

இம்மையத்துக்கென, தனியாக கட்டடம் ஒதுக்கீடு செய்து, குறிப்புதவி நுால்கள், நாளிதழ்கள் வாங்கப்பட்டு, பலர் பயன்பெற்று வந்தனர்.

மேலும், ஆன்லைன் வாயிலாக, வரி செலுத்துதல் ஆகியவற்றுக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. இம்மைய பராமரிப்பு மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால், இந்த மையங்கள், கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டமும் தற்போது செயல்பாட்டில் இல்லை. ஊர்ப்புற நுாலகங்களே இல்லாத, குடிமங்கலம் ஒன்றியத்தில், கிராம கற்றல் மைய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இத்திட்டத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கி, மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.






      Dinamalar
      Follow us