/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதிமன்றங்களில் ஜூன் 8ல் 'லோக்அதாலத்' விசாரணை
/
நீதிமன்றங்களில் ஜூன் 8ல் 'லோக்அதாலத்' விசாரணை
ADDED : மே 23, 2024 04:48 AM
கோவை : கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்டம் முழுவதும் தேசிய லோக்அதாலத் விசாரணை, ஜூன் 8ல் நடக்கிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடைபெறும். கோவை கோர்ட் வளாகத்தில், லோக் அதாலத் விசாரணையை, மாவட்ட நீதிபதி விஜயா துவக்கி வைக்கிறார். நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் , கல்வி கடன் , நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை உள்ளிட்ட சிவில் வழக்குகள், நில ஆர்ஜிதம், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.
இதற்காக, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், வரும் 24ம் தேதி முதல் ஜூன் 7 வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.

