sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வளைவில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிருடன் மீட்பு

/

வளைவில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிருடன் மீட்பு

வளைவில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிருடன் மீட்பு

வளைவில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிருடன் மீட்பு


ADDED : பிப் 26, 2025 11:41 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, லாரி கவிழ்ந்ததில், இடிபாடுகளில் சிக்கிய லாரி டிரைவரை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

பொள்ளாச்சி அருகே, பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் வளைவில், அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு பிளாஸ்டிக் கழிவு ஏற்றி சென்ற லாரி, ராசக்காபாளையம் வளைவில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரோடு வளைவில் இருந்த கல்லுக்கும், லாரிக்கும் இடையே, மாயவரத்தை சேர்ந்த டிரைவர் மாயவேல்,34, என்பவர் சிக்கி கொண்டு தவித்தார்.

இது குறித்து, அவ்வழியாக சென்ற மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us