/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து குறைவு; விலையில் பெரிய மாற்றமில்லை
/
வாழைத்தார் வரத்து குறைவு; விலையில் பெரிய மாற்றமில்லை
வாழைத்தார் வரத்து குறைவு; விலையில் பெரிய மாற்றமில்லை
வாழைத்தார் வரத்து குறைவு; விலையில் பெரிய மாற்றமில்லை
ADDED : ஆக 07, 2024 10:53 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து குறைவாக உள்ள நிலையில், விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை, என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில், விவசாயிகள் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில், அதிக தேவையுள்ள, செவ்வாழை, நேந்திரன், கதளி ரகங்களை தேர்வு செய்து, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
ஓணம் சீசனை எதிர்பார்த்து சாகுபடி செய்துள்ளதால், தற்போது மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து குறைவாக உள்ளது.
இதனால், கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, வழக்கத்தை விட வாழைத்தார் வரத்து குறைவாக உள்ளது. விலையில் பெரிய மாற்றம் இல்லை.
இந்த வாரம், செவ்வாழை கிலோ - 70, பூவன் - 35, கதளி - 40, சாம்பிராணி வகைகள் - 40, ரஸ்தாளி - 35, நேந்திரன் - 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்ற வாரத்தை விட, கதளி மற்றும் ரஸ்தாளி கிலோ - 5 ரூபாய் விலை சரிந்துள்ளது. நேந்திரன் மட்டும் கிலோவுக்கு, 4 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது உள்ளூர் வரத்து துவங்கியுள்ளது. ஆனால், தேவைக்கேற்ப வாழைத்தார் வரத்து இல்லாததால், வர்த்தகம் மந்தமாகவே உள்ளது,' என்றனர்.