sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறைந்த மின்னழுத்தம்; விவசாயிகள் அவதி

/

குறைந்த மின்னழுத்தம்; விவசாயிகள் அவதி

குறைந்த மின்னழுத்தம்; விவசாயிகள் அவதி

குறைந்த மின்னழுத்தம்; விவசாயிகள் அவதி


ADDED : பிப் 24, 2025 09:53 PM

Google News

ADDED : பிப் 24, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் இருந்ததால், விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் தென்னை, வாழை மற்றும் பிற வகை பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு, சொலவம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள எஸ்.எஸ் -2, டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த ரோட்டில் அமைந்துள்ள தனியார் கல்லுாரி கட்டட பணிகளுக்காக இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய பகுதிகளுக்கு மும்முனை மின் வினியோகம் செய்யும் போது, குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மோட்டர் சரிவர இயங்குவதில்லை; விவசாயத்துக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடியாமல் போகிறது.

மேலும், இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து ஒரு லைனில், மின்சாரம் அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருவதால், தோப்புகளில் உள்ள பல்புகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இதர மின் சாதனங்கள் பழுதடைகிறது. இதனால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விளை பயிர்களும் பாதிக்கப்படுகிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தனியார் கல்லுாரிக்கு முறையாகவே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்பகுதியில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து சரி செய்யப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us