ADDED : ஜூலை 25, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகா மா.கம்யூ., கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் பாலகுருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, தாலுகா செயலாளர் அன்பரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், துரைசாமி, அங்கமுத்து ஆகியோர் பேசினர்.
இதில், தமிழக அரசு, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்; மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நகர கிளை செயலாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

