/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 10, 2024 11:27 PM

அன்னூர் : குருக்கம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கணேசபுரம் அருகே குருக்கம்பாளையத்தில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக முன் மண்டபம், புதிய கோபுரம் அமைக்கப்பட்டு, சுற்றுப் பிரகார வேலைகள் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா, கடந்த 8 ம் தேதி துவங்கியது. காலையில் கணபதி ஹோமம் நடந்தது. மதியம் நவகிரக ஹோமமும், மாலையில் முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், புதிய சுவாமி சிலைகளுக்கு அபிஷேக பூஜையும் நடந்தது. மதியம் விமான கலசம் பிரதிஷ்டை செய்தலும், மாலையில், 108 ஹோம திரவிய சமர்ப்பனமும்நடந்தது.
நேற்று காலை 6:40 மணிக்கு, விமான கோபுரத்திற்கும், மூலஸ்தான மாகாளி அம்மனுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவையடுத்து தச தரிசனம், மகா அபிஷேகம், அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர், கணேசபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.