sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

/

மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்


ADDED : ஏப் 26, 2024 11:20 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, நாளை துவங்கி, அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறுமுகையில் சக்தி மெயின் சாலையில், சக்தி விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 24ம் ஆண்டு திருவிழா நாளை இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தியுடன் துவங்குகிறது.

29ம் தேதி பவானி ஆற்றில் ராமர் கோவில் படித்துறையில் இருந்து, தீர்த்த குடங்களை கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். புனித நீரால், விநாயகர், அம்மன், பாலமுருகன், நவகிரகங்களுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.

30ம் தேதி காலை மகா கணபதி ஹோமமும், பவானி ஆற்றில் இருந்து வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க, கோவிலுக்கு கம்பம் எடுத்து வருதலும், பின்பு பூச்சாட்டும், அதைத் தொடர்ந்து கம்பம் நடும் வைபவமும் நடைபெற உள்ளது.

மே 1ம் தேதியிலிருந்து, ஏழாம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கம்பம் சுற்றி ஆடுதலும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. அன்று இரவு அம்மன் அழைப்பும், சக்தி கரகம் எடுத்து வருதலும், நடைபெற உள்ளது.

எட்டாம் தேதி ராமர் கோவில் படித்துறையில் இருந்து, அம்மன் சக்தி கலசங்களும், படைக்களமும் அழைத்து வரப்படுகிறது. பின் காலை, 8:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வருதலும், அதைத் தொடர்ந்து அம்மன் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us