/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஹா சிவராத்திரி பள்ளயம் திருவிழா
/
மஹா சிவராத்திரி பள்ளயம் திருவிழா
ADDED : பிப் 25, 2025 10:20 PM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசுவாமி கோவிலில் நேற்று செண்டா மரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, பிரம்மகிரி அய்யாசுவாமி கோவிலில், மஹா சிவராத்திரி பள்ளயம் நிகழ்ச்சி கடந்த, 19ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. 20 முதல் 23ம் தேதி வரை, சுவாமிக்கு, பால் பூஜை, அலங்கார பூஜை மற்றும் படி விளையாட்டு போன்றவை நடந்தது.
நேற்று, 25ம் தேதி, செண்டா மரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் ஒன்றிணைந்து வாத்தியங்களுடன் செண்டா மரம் எடுத்து ஊர்வலமாக வந்து, அரோஹரா கோஷங்கள் முழங்க கோவிலின் முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று, சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடக்கிறது. மார்ச் 3ம் தேதி, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மறு பள்ளயம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.

