/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மைதானம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
/
மைதானம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : மார் 29, 2024 12:28 AM

மேட்டுப்பாளையம்;மைதானம் மாரியம்மன் கோவிலில், குண்டம் விழாவை அடுத்து, தேரோட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்- - ஊட்டி சாலையில், கிழங்கு மண்டிகள் நிறைந்த, மைதானத்தில், மிகவும் பழமை வாய்ந்த, மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில், 93ம் ஆண்டு குண்டம் மற்றும் தேர் திருவிழா, கடந்த, 12ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 21ல் கொடியேற்றமும், 22ல் இரவு கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடந்தது.
கடந்த, 26ம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து, குண்டம் இறங்கும் வைபவமும் நடந்தது. இதில் அலகு குத்திய ஆண்கள், பெண்கள் மற்றும் ஏராளமானவர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நேற்று முன்தினம் இரவு, அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், ஊட்டி சாலை, நெல்லித்துறை சாலை, உருளைக்கிழங்கு மண்டி வீதிகள் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. இன்று, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், ஏப்ரல் 1ம் தேதி மறு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் விழா கமிட்டினர் செய்து வருகின்றனர்.

