ADDED : பிப் 15, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரோஜ் அலம், 26, கூலி தொழிலாளி. இவர் நெகமம் அருகே உள்ள கொண்டேகவுண்டம்பாளையம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இதில், பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இவரை, போலீசார் சோதனை செய்ததில், 80 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வர, இவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

