/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஏழாண்டு சிறை
/
போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஏழாண்டு சிறை
ADDED : மே 09, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : போக்சோ வழக்கில் கைதான நபருக்கு, ஏழாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்,44. இவர், கடந்த 2022ல், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டு,கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட் டில், செட்டிபாளையம் போலீசாரால், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு, ஏழாண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.