sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாளை மாரியம்மன் தேரோட்டம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்

/

நாளை மாரியம்மன் தேரோட்டம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்

நாளை மாரியம்மன் தேரோட்டம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்

நாளை மாரியம்மன் தேரோட்டம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : மார் 04, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த மாதம் 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

கடந்த 18ம் தேதி கம்பம் நடுதல், 27ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 28ம் தேதி முதல் பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர்.

நாளை, 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் முதல் வெள்ளி தேரோட்டம் துவங்குகிறது. கோவிலில் துவங்கி, வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்படுகிறது.

6ம் தேதி வெங்கட் ரமணன் வீதியில் தேரோட்டம் துவங்கி, சத்திரம் வீதியிலும் நிலை நிறுத்தப்படுகிறது. வரும், 7ம் தேதி மூன்றாம் நாள் கோவிலில் தேர் நிலை நிறுத்தப்படுகிறது.

தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. வரும், 8ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள், கலசத்தில் புனித நீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.மேலும், ஊர்வலமாக புனித நீரை எடுத்துக்கொண்டு, மேள, தாள இசையுடன் கோவிலுக்கு வந்தனர். இதனால், பொள்ளாச்சி பகுதியே நேற்றுமுதல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்டத்துக்காக, அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேரும், விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும் தயார்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us