sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'மெய்யழகன்' இசை வெளியீட்டு விழா

/

 'மெய்யழகன்' இசை வெளியீட்டு விழா

 'மெய்யழகன்' இசை வெளியீட்டு விழா

 'மெய்யழகன்' இசை வெளியீட்டு விழா


ADDED : செப் 01, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் நேற்று நடந்தது.

'96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று, கோவை கொடிசியா அரங்கத்தில் நடந்தது.

திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படக் குழுவினர் அப்படம் குறித்த கருத்துகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் கார்த்தி கூறுகையில், “எனது வேர்கள், உறவுகள், கோவையில் தான் உள்ளது. '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம், 6 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கியுள்ளார்.

''மெய்யழகன் அற்புதமான படமாக இருக்கும். நானும், அரவிந்த்சுவாமியும் படம் முழுக்க வருவோம். இப்படம், 1996 காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. எமோஷனலாக இருக்கும்,'' என்றார்.

நடிகை ஸ்ரீ திவ்யா கூறுகையில், “நான் தேர்வு செய்து தான் படங்களில் நடிக்கிறேன். அதனால் இடைவெளி இருக்கலாம்” என்றார்.

படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், “படத்தின் கதை தஞ்சாவூர் பகுதியில் நடப்பது போன்று உள்ளது. ஆனால், கதையின் கரு மையம் கோவை என்பதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இங்கு நடத்துகிறோம். எல்லாரையும் மரியாதையாக நடத்துபவர்கள் கோவை மக்கள். நமக்கு தெரியாமலேயே நம் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்கள் பற்றிய கதை இது,'' என்றார்.

நிகழ்ச்சியில், நடிகர்கள் சிவகுமார், அரவிந்த் சுவாமி, இயக்குநர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us