sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி வாசல்களில் மிலாடி நபி விழா

/

பள்ளி வாசல்களில் மிலாடி நபி விழா

பள்ளி வாசல்களில் மிலாடி நபி விழா

பள்ளி வாசல்களில் மிலாடி நபி விழா


ADDED : செப் 17, 2024 10:12 PM

Google News

ADDED : செப் 17, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களில், மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை மற்றும் அன்னதானம் நடந்தது.

இஸ்லாமிய மதத்தின் இறுதி இறை துாதராக கருதப்படும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான, ரபி--அல்- அவ்வலில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, மிலாடி நபியான நேற்று, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி பள்ளிவாசல்களில், நபிகளின் அறிவுரைகள், பொன்மொழிகளை நினைவு கூர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது.

காலையில், 'மவுலித் ஷரிப்' எனப்படும் சிறப்பு ஓதலை தொடர்ந்து, மதியம் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனுார், மஸ்ஜிதில் மதீனா பள்ளிவாசலில் மிலாடிநபி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மவுலவி தமீமுல் அன்சாரி ஜைனி ஹஜ்ரத், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை விளக்கிப் பேசினார்.

விழாவில், ஹாஜி அப்பாஸ், மவுலவி பாருக்அப்துல்லா கைரி, ஹாஜி சம்சுதீன் மற்றும் கோவிந்தனுார் ஜமாஅத்ததார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அனைவருக்கும் கந்துாரி உணவு வழங்கப்பட்டது.

* வால்பாறையில் நடந்த மிலாடி நபி விழா, ஆனைமலை ஹில்ஸ் முஸ்லீம் ஜாமாத் சார்பில், மூத்தவல்லி பூங்கோயாதங்கள் தலைமையில் நடந்தது. மூத்தவல்லி கமாலுதீன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு தலைவர் குஞ்ஞாலி, செயலாளர் யூசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு தொழுகைக்கு பின் இஸ்லாமியர் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். அன்னதானத்தை கவுரவ தலைவர் அமீது துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us