/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாம்பிராஸ் சார்பில் நீர்மோர் வினியோகம்
/
தாம்பிராஸ் சார்பில் நீர்மோர் வினியோகம்
ADDED : மே 09, 2024 05:01 AM
கோவை : தாம்பிராஸ் டாடாபாத் கிளை சார்பாக நீர்மோர் வினியோகம் செய்யும் பணி மாநில தலைவர் சி.ஜி.வி., கணேசன், மாவட்ட தலைவர் சுப்ரீம் சங்கர் ஆகியோர் தலைமையில் டாடாபாத்தில் நேற்று நடந்தது.
மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் டாடாபாத் கிளை செயலாளர், மற்றும் பொறுப்பாளர், மாநில ஆலோசகர் கல்யாண கிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் அன்னபூரணி நாகராஜன், இ.கே., நாகராஜன் மற்றும் அங்கத்தினர்கள் பங்களிப்பில் துவங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு, 2,500 பேருக்கு மேல் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவில் வேத பாடசாலையில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இதில் கடையநல்லூர் ஸ்ரீ ராஜகோபால பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.